க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 287

உயிர்க் கொடை

இனிய நண்பா!

நான் கற்பம்
தரிக்க மட்டுமா பிறந்தேன் ?
தாய் மண்ணுக்காகவும்
வாழ்வேன் பாடல்!

எதிர் ஒலிக்கின்றது !

கூந்தலை இழந்து
குறிக்கோளை மனதில்
கொண்ட பெண்
தன் நண்பியிடம்
நான் தாய் மண்ணுக்காக
உயிர்க் கொடையானால்
என் உடலை
உடனே எரித்து விடு

இல்லை என்றால்
என் சடலத்திலேயும்
வன் புணர்ச்சி
செய்வார்கள் காடையர்கள்
என்றாள் வீராங்கனை !…

இன்னும் அந்த
மிருகங்கள்
வாழலாம் !
உன் வழியும்
விழியும்
விழிப்பாக இருக்கட்டும்
நண்பா !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan