மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 96

பேசாமல் பேசும் உலக மொழி

ஒலி இன்றிய உலகம்
எனதாகிப் போச்சு
அமைதி எனது
மனதில்
நிசப்தம் என
கொள்ளலாமே!

கண்கள் பேசும்
கவிதையை
கருத்தினில்
நாளும் உணர்வேனே !

சொல்லும் உதட்டின்
குவிதலைப் பார்த்து
குறி கொண்டு
செய்தியை அறிந்திடுவேனே!

விரல் அங்க
அபிநயமும்
எழுத்தறிவும்
விரைந்து பேசும்
செயற்திறனை
தந்திடுமே !

தடைகள் ஏதுமில்லை
தயக்கங்களை. மனதில்
களைந்தால்

பேசாமலும் பேசலாம்
பேதமையையும்
போக்கிடலாமே !!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading