மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு287
விருப்ப தலைப்பு
“தோழா உனக்கு..,”
எழுந்து விட்டேன் தோழா !
விடிந்து விட்டதே பார்
முடிந்து விட்டதே தோழா
முடியாத துயரெல்லாம் நெஞ்சில்

காலங்கள் ஓடுவது அவசரமாய்
காரியங்கள் பலவுண்டு தோழா
கரைந்து போன நினைவுச்சுழல்கள்
கலங்கிப் போன கனவுக் குவியல்

உள்ளத்தை உரமாக்கி நீயும்
உணர்வுகளைத் தீட்டிக்கொள்
உலத்தின் வரைபடத்தில் தோழனே
உனக்கும் ஒரு இடமுண்டு

நேற்றைகளைத் தொலைத்தவர் பலர்
இன்றைகளைத் தவற விட்டு
நாளைகளுக்காய் ஏங்குகிறார்
நீயேற்றும் விளக்கின் ஒளி பரவட்டும்

கண்ணீர் எம் கன்னங்களில்
வரைந்த கோடுகளின் வலிமை
காலத்தை மாற்றி எழுதும்
வல்லமையை கைகளுக்கு கொடுக்கும்

உற்சாகத்தோடு புறப்படு தோழா !
உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பாயட்டும்
இனியெமது காலமென்னும் கீதத்தை
இதயத்துள் உரக்கவே இசைத்திடு

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading