29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு287
விருப்ப தலைப்பு
“தோழா உனக்கு..,”
எழுந்து விட்டேன் தோழா !
விடிந்து விட்டதே பார்
முடிந்து விட்டதே தோழா
முடியாத துயரெல்லாம் நெஞ்சில்
காலங்கள் ஓடுவது அவசரமாய்
காரியங்கள் பலவுண்டு தோழா
கரைந்து போன நினைவுச்சுழல்கள்
கலங்கிப் போன கனவுக் குவியல்
உள்ளத்தை உரமாக்கி நீயும்
உணர்வுகளைத் தீட்டிக்கொள்
உலத்தின் வரைபடத்தில் தோழனே
உனக்கும் ஒரு இடமுண்டு
நேற்றைகளைத் தொலைத்தவர் பலர்
இன்றைகளைத் தவற விட்டு
நாளைகளுக்காய் ஏங்குகிறார்
நீயேற்றும் விளக்கின் ஒளி பரவட்டும்
கண்ணீர் எம் கன்னங்களில்
வரைந்த கோடுகளின் வலிமை
காலத்தை மாற்றி எழுதும்
வல்லமையை கைகளுக்கு கொடுக்கும்
உற்சாகத்தோடு புறப்படு தோழா !
உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பாயட்டும்
இனியெமது காலமென்னும் கீதத்தை
இதயத்துள் உரக்கவே இசைத்திடு
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...