சக்தி சங்கர்

வணக்கம்!
சந்தம் சித்தும் சந்திப்பு
விடுமுறை
*************
ஆண்டுதோறும் முப்பது நாட்கள் பணி இடத்தில் கிடைக்கும்
ஆசையாய்ச் சேர்த்து வைப்பேன்
மார்கழி எப்போவரும்
என்மனக்கோட்டையில்
வந்துபோகும் திருவெம்பாக் காலம்
மாரியம்மன் உற்சவம் மனத்திலே குதூகலம்
ஊர்கூடித் தேர் இழுக்க
உள்ளம் பொங்கும் உவகையினால்
ஒரே கல்லில் இரு மாங்காய் விழுத்துகிற மாதிரி
ஆர்வத்துடன் இருப்பேன் அக்காவையும் பார்க்கலாம் என்று
யார் கொண்டுவந்த விதியோ?நானா அல்லது அக்காவா?
இரு மாதங்கள் முன்னே உருவத்தால் மறைந்து அருவமாய்ப் போனார் அக்கா!
விடுமுறையில்செல்ல மனமில்லாதவளாய்
விரக்தியுடன் வீட்டுக்குள்ளே….

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading