மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்!
சிவதர்சனி இராகவன்
கவி -1636

இது எழுத்தின் ஏற்றம்!
பழுதிலா மொழியதைப்
பாரினில் காக்க
உழியது கொண்டு
செதுக்கியே பேணக்
கருத்தினில் ஊன்றிக்
கவிவெனப் போற்றப்
படைப்பினை யாத்துப்
பக்குவமாய் வாழ்த்த
வந்ததோர் வாரமே
வரமெனத் தோன்றுதே!!

வேரின் ஊக்கம்
வெற்றியின் தேக்கம்
வேருக்கினிப் பழுதில்லை
வெல்லுவதே நோக்கம்
இருப்பின் வலுவே
இணைப்பின் பாலமே
நொடியும் ஆக்கமாய்
நோக்கம் நிறைக்குதே
காக்கும் ஊடகத்தின்
கண்ணியப் பயணம்
கலங்கரை விளக்காய்
ஒளிர்வது திண்ணம்!

சந்ததி தழைக்கச்
சரிதம் வரையக்
கூடியிணைந்தோம்
குன்றதில் ஒளிர
ஏற்றிவைத்த ஏணியே
என்றும் எழுச்சி தந்த
என்றனின் தாயே
வெள்ளியாய் நீ மின்ன
வேளையிது வாழ்த்துகிறேன்!
சிவதர்சனி இராகவன்
2/6/2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading