மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

விடுமுறை
தவணைக்கு ஒருமுறை
பாடசாலை தந்தது விடுமுறை.
எந்தப் பொறுப்பும் இல்லாத காலம்.
விளையாட்டுக்களுடன் விடுதலை கழியும்
கோயில் திருவிழா
இணுவில் தியேட்டரில்
இடை இடை பக்திப்படம்
மாமா கருணையில்
யாழ் திரை அரங்கில்
அடுத்த ஊரில் சித்தப்பா வீட்டில்
இப்படியாக லீவு கழிந்த
படித்த காலம்.
வேலை என்று
சேர்ந்த போது
ஞாயிறு விடுமுறை
வாரம் ஒருமுறை
வரமாய் விடுமுறை
திருமணம் புரிந்து
பிள்ளைகள் பிறந்து
பிள்ளைகள் கடமைகள் ஒவ்வொன்றாய் செய்து
நித்திரை கொள்ளவும்
வடுமுறை இல்லா
நித்தம் வேலை.
வயோதிபம் வந்தும் விடுமுறை இல்லை
பேரர் பார்ப்பு
பிள்ளைகள் ஒவ் வொன்றின்
பிரசவம் பார்ப்பு
வாழ்வு சுழற்சியில்
வராது விடுதலை
-சிவரஞ்சினி கலைச்செல்வன –

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading