மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-53
26-11-2024

உயிர்கொடை

தானதர்மம் செய்வதில்
தருமனும் கர்ணனும்
வரலாறில் படித்த
வள்ளல்களே!

தக்க சமயத்தில்
தன் இனம், மொழி காக்க
தன்மானம் கொண்டு
தம் உயிர்நீத்த தலைவனே!

உயிர்கொடை உத்தமரே
உறவுகளை பிரிந்து நின்று
உணவுகளும் பல நாளின்றி
உலக நாடும் கேட்பாரின்றி

செங்களமாடிய
செல்வங்கள் நீவிர்.
செய்த கொடைக்கு ஈடேது
சென்று வருவீர்கள் தாங்கள்!

எம் இனங்களின் மனங்களில்
உங்களின் தியாகம்
செங்காந்தளின் தீ சுவாலையாய்
சுடர் விட்டெரியட்டும்

தங்களின் கனவுகளும்
தாகங்களும் உறங்காது
கைகொடுத்து, காந்தள் மலர்கொண்டு
கைதொழுது மண்டியிடுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading