அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

வேள்வி

தாயக விடுதலை வேள்வி தன்னில்
நாயகர் எத்தனையோ மாண்டனர் ஈழமண்ணில்
யாருக்காக இந்த அளப்பரிய யாகம்
ஈரைந்து மாதமாய் சுமந்தவள்போல் தியாகம்

தன்னுயிர் கொடுத்து செய்திட்டதந்த தேசப்பணி
மண்ணிலே அறம்காத்த போராட்டமோ தனி
சாவரினும் தளர்ந்திடாத இனங்காக்கும் செயல்
யார்வரினும் பணிந்திடாது தணியாத புயல்

பூமிமேடையில் தான்தனக்கென்ற சுயநல மனிதர்கள்
சாமிகளாயுலாவிய இவரன்றோ இனத்தின் புனிதர்கள்
புறப்பட்டனரே உறுதிபூண்டு உரிமைகளை வெல்ல
மறவர்களின் சாதனைகள் ஒன்றாரெண்டா சொல்ல

இலட்சிய கனவுக்காய் தம்மையே கொடுத்தாரே
மலர்ந்திட தாயகம் ஆயுதம் எடுத்தாரே
குண்டுமழையில் நின்று களமாடிய மாவீரரே
என்றுமழியாது மைந்தரின் புகழ் பேரதே

ஜெயம்
26-05-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading