மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

அத்திவாரம்

எந்தன் வாழ்க்கையை தாங்கிவிடும் அத்திவாரம்
சொந்தமாகிட எனக்கெனவே வடிவெடுத்த அவதாரம்
தந்துகொள்ளவே இன்னொரு தாயான தாரம்
இந்த உயர்நிலை வாழ்க்கையின் ஆதாரம்

இரும்பாயிருந்தவன் கரும்பாய் மாறிய அதிசயம்
இதுவரையில் புரியவில்லை அந்த இரகசியம்
அறிந்தேன் அருகினில் சுகங்களின் பக்கமே
குறிப்பாய் சொல்லப்போனால் மண்ணில்தான் சொர்க்கமே

எனக்காக யோசிக்க வந்ததோர் துணை
கணவனானாலும் தன் முதற் குழந்தையாக்கினாலெனை
உன்னோடு நானென உயிரையும் கரைக்கும்
அன்பைப் பகிர்கின்றாளே போதுமெனும் வரைக்கும்

தன் சந்தோசம் பதியின் சந்தோசமென
ஜென்மத்திற்கும் தருவேன் வற்றாது நேசமென
விழும் விம்பத்தையும் சேர்ந்தே சுமப்பவள்
எழுகின்ற வாழ்க்கையின் மூலமாய் அமைபவள்

ஜெயம்
03-07-2024

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading