02
Jul
கவிஎழுதுகிறேன்
வர்ண வர்ண பூக்களே
வர்ண வர்ண பூக்கள்
மலர்களில் பலவிதம்
மண்ணிலே புதுவிதம்
இயற்கை செயற்கை
இணைந்த பூக்கள்
இறைவன்...
26
Jun
இது வாழ்க்கையப்பா
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
ஜெயம் தங்கராஜா
கவி 611
மெய்யானது பொய்யானது
நேற்றிருந்தோர் இன்று இல்லை இன்றிருப்போர் நாளையில்லை
என்றநிலை கொண்டதிந்த பூமியெல்லை பொய்வாழ்வின் புலம்பல் நிலை
தோன்றுவதெல்லாம் மறைவதற்காகவே
பூப்பது ஒருநாள் வாடுவதற்காகவே
ஆட்டமாடும் தேகம் வேகும்
ஒருபிடி சாம்பலாகும்
உண்டு உடுத்தி சுழன்றடித்து
மாயவலைக்குள் அகப்பட்டு
மண்ணென்றும் பொன்னுன்றும் ஆசைக்குள் கட்டுண்டு
புலன்களை அடக்காது ஆடுமிந்த சரீரம்
கெட்டுத்தான் விழுமட்டும் ஓடும்
பட்டுச் சரியுமட்டும் ஆடும்
என்னவெனச் சொல்லுவது காலனுக்கும் அஞ்சாது
வளமைமாறி இளமைவிட்டு முதுமைதொட்டு
இருண்ட விழிகளுடன் நரைதிரைத் தோற்றம்
செவிப்புலன் குன்றி கூனிய முதுகுடன் மூன்றுகால்களில் நகர்வு
காயமது மாயம் தேனானது வீணானது
படைப்பு அழியும் நீர்க்குமிழி உடையும்
மெய்யென்பது பொய்யாகும்
ஆவிவிட்டு உடல் உணர்வின்றிக் கிடக்கும்.
ஜெயம்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...