வர்ண வர்ணப்பூக்கள்

கவிஎழுதுகிறேன் வர்ண வர்ண பூக்களே வர்ண வர்ண பூக்கள் மலர்களில் பலவிதம் மண்ணிலே புதுவிதம் இயற்கை செயற்கை இணைந்த பூக்கள் இறைவன்...

Continue reading

அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 611
மெய்யானது பொய்யானது

நேற்றிருந்தோர் இன்று இல்லை இன்றிருப்போர் நாளையில்லை
என்றநிலை கொண்டதிந்த பூமியெல்லை பொய்வாழ்வின் புலம்பல் நிலை

தோன்றுவதெல்லாம் மறைவதற்காகவே
பூப்பது ஒருநாள் வாடுவதற்காகவே
ஆட்டமாடும் தேகம் வேகும்
ஒருபிடி சாம்பலாகும்

உண்டு உடுத்தி சுழன்றடித்து
மாயவலைக்குள் அகப்பட்டு
மண்ணென்றும் பொன்னுன்றும் ஆசைக்குள் கட்டுண்டு

புலன்களை அடக்காது ஆடுமிந்த சரீரம்
கெட்டுத்தான் விழுமட்டும் ஓடும்
பட்டுச் சரியுமட்டும் ஆடும்
என்னவெனச் சொல்லுவது காலனுக்கும் அஞ்சாது

வளமைமாறி இளமைவிட்டு முதுமைதொட்டு
இருண்ட விழிகளுடன் நரைதிரைத் தோற்றம்
செவிப்புலன் குன்றி கூனிய முதுகுடன் மூன்றுகால்களில் நகர்வு

காயமது மாயம் தேனானது வீணானது
படைப்பு அழியும் நீர்க்குமிழி உடையும்
மெய்யென்பது பொய்யாகும்
ஆவிவிட்டு உடல் உணர்வின்றிக் கிடக்கும்.

ஜெயம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading