தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே

குறுகிய பாதையில் நீண்டு
தொடரும் மனிதர் வாழ்வோ
மாறி மாறியே அச்சுறுத்தும்
காலநிலை கடலலையோடு
கவலைக் கண்ணீர் படருதே

தினந்தினம் வெவ்வேறு சவால்
மனங்கலங்கும் மழை நீரிலேயே
பெரு வெள்ளம் கனவெறியோடு
துரத்த மண்சரிவுப் புதைகுழியில்

புதைந்த மாந்தரும்,சிதைந்த வீதி
பாதி பிளந்து ஊரோடு ஓடிய நீர் –
ஊற்றும் கூறு போட இரவிரவாக
தூக்கமின்றி சிணுங்கிய சிறுவர்,
அனுங்கிய முதியோரும் தவிக்கும்
நிலைதான் மாறிடுமா? மாறிடுமோ?

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading