மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

திசைகாட்டி

ஜெயம் தங்கராஜா

கவி 743

திசைகாட்டி

கல்வியுடன் உலக அறிவுதனை ஊட்டி
நல்வழிகள் காட்டி நிற்கும் திசைகாட்டி
திறமையுற மாணவர்கள் எளிமையாக போதித்து
சிறந்தவரை உருவாக்கி காட்டிடுவார் சாதித்து

கருவறையில் தாயாலே உயிரைப் பெறுகின்றோம்
வகுப்பறையில் குருவாலே வாழ்வைப் பெறுகின்றோம்
வருங்கால சமுதாயத்தை ஏற்றவாறு உருமாற்றி
தருகின்ற ஆசிரியர் பணியும் போற்றி
களிமண் கலவையும் சிலையாகும் தன்மை
வெளிப்பட்டோர் பலரிங்கு இவராலே உண்மை
அறியாமையெனும் இருளை அகற்றிய புனிதர்கள்
அறிவுள்ளவர் எவராலும் போற்றப்படும் மனிதர்கள்

நல்லொழுக்கம் பெரும்பாலும் ஆசிரியரிடம் கற்றது
கல்வியெனும் கொடையதுவும் ஆசானிடம் பெற்றது
அறிவுப்பசியை தீர்த்திடும் அளப்பரிய சேவை
குறிப்பாக ஆசிரியர் வழிகாட்டல் தேவை

ஜெயம் 03-10-2024

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading