மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

காணாமல் போனதம்பியரே…….!
உமக்கொரு கடிதம்.
“”””””””””””””””””””””””””””””

எங்கே தேடுவேன்? எதுவும் முகவரி?
எங்கே எழுதுவேன்?எப்படிச் சேர்ப்பேன்?
எத்தனை விடயம் உம்மிடம் பேச……
அத்தனை அலைகள் அடிமனத் திடையே
சிந்தையை நிறைத்துச் சிதறா துறையுது!
விந்தையும் இதுவே விரும்பினேன் அழவே
எந்தையை இழந்தோம் ஏதிலி யானோம்
உடன் பிறப்புகளே! உண்மைகொள் உறவே!
கடனது செய்யும் கடமைகள் உமக்கே
இன்றுநீர் இருந்தால் இனிக்கும் என்வாழ்வு
துன்பியல் நாடகத் தொடரரங் கானீர்
உள்ளே ஓலம் ஓயாத சோகம்
பள்ளம் பறித்துப் பாயுதென் கண்ணீர்
எங்கே செல்வேன் எப்படித் தேடுவேன்
பங்கில் உதித்தீர் பதிவுகள் ஆனீர்
ஏனெமைப் பிரிந்தீர்? எங்கே மறைந்தீர்?
கூனென வாகினும் குலமுறை வழுவோம்
அன்றுனைப் பிரிந்த அவலம் அதனால்
அன்னை பிரிந்தார் அறிந்தீரா?இல்லையா?
நடந்தது என்னவென் றெழுதிடும் வரிகளில்
இடந்தனை அறியவும் இயலுமை யாகுமோ?
அன்றிதை படிப்பேன் அசையும் உம்காற்றில்
அன்றேல் வருவேன் உம்மிடம் கேட்க!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading