மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 174

தலைப்பு — கருணையுடன் உதவுபவரை

கல்வியைக் கற்கலாம் கலாநிதியாய் நிற்கலாம்
இல்லையது என்றாலும் உள்ளத்தில் கருணையுடன்
வள்ளலாய் முன்வந்து விநியோர்க்கு உதவுபவரை
எல்லோரும் போற்றுவர் ஏற்புடைய பட்டமிட்டு.

காலத்தைக் காசைக் கரைக்கும் கற்று
ஞாலத்தில் பட்டங்கள் பலவற்றைப் பெற்றாலும்
வாழக்கற்று அன்புடன் வல்லபமுடன் பண்போடு
சீலமுடன் வாழ்பவரையே சகலரும் விரும்புவர்

அடுத்தவன் பணத்தை அதிகாரத்தால் பறித்து
எடுத்தாலும் அமைதியோ ஆனந்தமோ நிறையாது
எடுப்பதால் நிம்மதி அருகில் வருவதில்லை
கொடுப்பதால் உயர்வைக் காணலாம் உலகிலே.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
10/05/2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading