மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

பண்டிகை வந்தாலே…..

ரஜனி அன்ரன்

பண்டிகை வந்தாலே……கவி…ரஜனி அன்ரன் (B.A) 31.10.2024

பண்டிகை விழாக்கள் என்றால்
பண்பாட்டு விழுமியங்கள் களைகட்ட
கொண்டாட்டம் கும்மாளமென்று
புதுச்சட்டையும் போட்டு
பண்பாடி மகிழ்ந்திட்ட பசுமைக் காலமது
பட்டாசும் வெடிக்க வாண வேடிக்கையோடு
பட்சணங்கள் பரிமாறி பலகதைகள் கதைத்து
உறவுகளும் ஒன்றுகூடி மகிழ்ந்திட்ட காலமது !

பண்டிகைக் காலம்
அன்பினைப் பகிரும் காலம்
குடும்பமெனும் பந்தம்
குதூகலம் கொள்ளும் காலம்
தீபங்கள் ஏற்றி இருள் விரட்டி
ஒளி நிறைந்த வாழ்விற்கு வழிகா,ட்டி
பழைய கசப்புக்களும் மறந்து
புதிய நம்பிக்கை ஊட்டும்
பண்டிகை வந்தாலே பெரு மகிழ்வே !

ஆனாலும் புலத்து வாழ்வு தனில்
பண்டிகைகள் என்றாலோ
பண்பாடுமில்லை பரவசமுமில்லை
விடுப்பும் இல்லை விருந்துமில்லை
பகட்டிற்கு வாழ்த்துக்கள் பரிமாற
பண்டிகை வருகுது போகுது
ஏனோ தானோவென்று நகர்கிறது வாழ்வும்
எல்லோர் வாழ்விலும் இன்பம் நிறையட்டும்
வளங்கள் யாவும் பெருகட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading