மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

பாலதேவகஜன்

பெண்ணே!

எண்ணமெல்லாம் நிறைந்தவள்
எனதுயிரில் கலந்தவள்
வண்ணமான வாழ்வுக்குள்
என்னையே அழைத்தவள்.

வாலிபம் அத்தனையும்
வைதூரியமாய் ஜொலித்தவள்
வாழவே! அவளென்ற
வைராக்கியத்தை தந்தவள்.

காதல் மேவலுக்குள்
கண்ணியமாய் இருந்தவள்
கால மோகத்தினில்
களன்றே சென்றவள்.

வரட்சியில் நிற்கும் மரமாய்
வெறுமையானது என் வாழ்வு
புரட்சி செய்து பலனும் இல்லை
புரட்டிப் பார்க்க பலமும் இல்லை.

இடர்பட்டு நிற்பதற்கா
இனிமைகளை தந்தாளோ!
இனியென்ன வாழ்வென்ற
வெறுப்புக்குள் நின்றேனே.

காதல் மயக்கத்தில் அவள்
கபடம் உணராமல்
காதல் அவளென்ற
கண்ணியத்தை காத்தேனே!

எண்ணி எண்ணி அழுகின்றேன்
ஏமாந்ததற்காக அல்ல
என்னை பிரிந்து அவள்
எப்படி வாழ்வாளோ என்று.

ஒன்றாய் திரிந்த நினைவுகள்
ஓயாத அலைகளாய்
ஒன்றாய் வாழ்வோமென்ற கனவுகள்
ஓய்வெடுக்கும் நிலைகளாய்.

புரியாது பிரிந்தவள்
புரியும் காலத்தில்
தெரியாத உலகில் நான்
உரிகியே கிடப்பேன்
அவள் நினைப்போடு.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading