16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 270
18/06/2024 செவ்வாய்
“வசந்தம்”
—————
தென்றலுக்கு இவள் தங்கை!
தேன்சொட்டும் இள நங்கை!
என்றனுக்கும் இம் மங்கை!
ஈய்ந்திடுவாள் தன் பங்கை!
வசந்தமகள் இங்கு வந்தாள்!
வளமெல்லாம் தந்து நின்றாள்!
கசப்பு நீக்கி இனிமை தந்தாள்!
களைபோக்கி இளமை தந்தாள்!
தென்மேல் காற்று வீசவைத்தாள்!
தேகம் வருடிப் போகவைத்தாள்!
தன்மேல் உலகை சிறையிட்டாள்!
தானே முதல்வி என்றுரைத்தாள்!
தென்றல் தனக்கு உறவென்றாள்!
தேனீ தனது துணையென்றாள்!
அன்றலர்ந்த மலர் தானென்றாள்!
அழகிற்கு, தானே உருவென்றாள்!
இதுபோல் என்றும் சுகம் வருமா!
இனிய வசந்தம் தினம் வருமா!
சதிசெய் குளிரும் மறைந்திடுமா!
சர்வமும் அழகாய் தெரிந்திடுமா!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...