மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 273
09/07/2024 செவ்வாய்
“அத்திவாரம்”
—————-
பாம்பு இரவினில் ஓடுவதேன்..
பழங்கிணறு தானே இடிவதேன்?
தோம்பிலிருந்து ஒரு “நொடி”
தொடுத்து விட்டார் அம்மணி!

மௌனத்தில் சில நொடி……!
மாறன் சொன்னான் மறுமொழி!
அடிப்பாரற்று! அடிப்பார் அற்று!
அசந்து விட்டேன் ஒரு நொடி!

தலைப்பிற்கு இது எப்படி…….
தலையைத் தானே சொறிகிறீர்!
அலைக்க வில்லை மேலும்….
அடுத்துச் சொல்கிறேன் கேளும்!

அபிராமி தினத்தில் பெரியோர்..
அழுத்தி பிடித்து சொல்லித்தர
அரிச்சுவடி தனை படிக்கிறோம்!
அத்திவாரம் அன்று இடுகிறோம்!

நாளும் கோளும் பார்ப்போம்!
நல்ல நேரமும் கேட்போம்!
பள்ளம் மேடதைத் தவிர்ப்போம்!
பக்குவமாய் அடிக்கல் இடுவோம்!

அத்தி வாரமது பலமானால்….
அடிப்பார் என்றுமே தகராது!
சத்திய வாக்கிதை மதிப்போம்!
சகலமும் பெற்றிங்கு வாழ்வோம்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading