நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan மண்ணிலே மெல்லவே அகரத்தை கிறுக்கி கண்ணிலே நீர்வடிய கட்டி அணைத்தவர் அம்மாவின் முந்தானை கைவிடாத...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 164
01/03/2022 செவ்வாய்
“என்னாள் தானென்றாள்!”
அந்நாள் என் வாழ்வில்
-அரியவோர் பொன்னாள்!
அன்றுதான் முதன்முதல்
-என்வீடு வந்தாள்
என்னாள் தானெனச்
-எழிலாகச் சொன்னாள்
“எமக்குள் இடைவெளி
-இனியேது என்றாள்!”

கண்ணால் தூரக்கதை
-சொன்ன கன்னியவள்
காதில் கதைசொல்ல
-என்னருகே வந்தாள்
மண்ணிலும் பொன்னிலும்
-சுகமேது என்றாள்
மனைவியாய் வாழ்வதே
-மேலான தென்றாள்!

உற்றவள் நானின்று
-உம்மருகே இருக்க
உமது கவலையெலாம்
-உருகிவிடும் என்றாள்
கற்றவளாய் என்னைக்
-காமுறவும் வைத்தாள்
காணாத இன்பத்தால்
-களிப்படைய வைத்தாள்!

என்னவள் ஈந்தாள்
-எமக்கிரு செல்வங்கள்
என்துணையாய் எதிலும்
-அவளே இருப்பாள்
அன்னவள் அருகிருக்க
-ஏதுகுறை அவனியில்
ஆண்டவன் அருளுண்டு
-எங்களுக்கு பூமியில்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan