மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 178
14/06/2022 செவ்வாய்
பாமுகமே! பாடுகிறேன் உன்புகழை!
———————————————
வெள்ளி விழாக் காணும் பாமுகமே!
வேண்டுகிறேன் உன்புகழ் உயர்ந்திடவே!
அள்ளித் தருவாயே அரும் தமிழை
ஆங்கில நாட்டிலினில் இருந்த வாறே!

வள்ளிக்கு முருகன் வாய்த்தது போல்
வாணியும் மோகனும் சேர்ந்த தனால்
புள்ளி மயிலெனத் தோகை விரித்து
பூவுலகில் பறந்த்டும் எம் பாமுகமே!

துயிலப் போகும் குழந்தைகளும்
துயிலை மறந்திடும் நின் வரவால்!
பயிலும்படிப்புடன் பல்கலையும்
பாங்குடன் வளர்ப்பாய் பாமுகமாய்!

நாட்டினில் நடக்கும் நிகழ்வுகளை
நல்லவை தீயவை எதுவெனினும்
நமக்கு தந்து வியக்க வைப்பாய்
நானிலம் சிறக்க உதவிடுவாய்!

செவ்வாய் மற்றும் வியாழனிலும்
செந்தமிழ் கவிதைகள் நீ தருவாய்!
கொவ்வை இதழ் கொண்ட அஞ்சுகமே
கோகில மங்கையே நீ வாழ்க!

தமிழெனும் தடாகத்தில் தாமரையாய்
தாரணி மீதினில் இதழ் விரித்து
அமிழ்தினும் இனிதாம் எம்மொழியை
அகிலம் முழுதும் நிலைக்க வைப்பாய்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading