மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 182
27/07/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“பறவைகள் பல விதம்…”
————————————
பாலையும் நீரையும் பிரித்து
பருகிடும் ஆற்றல் கொண்டு
காலமெல்லாம் வாழ்பவளே
கனிவாம் அன்னத் திருமகளே!

கொஞ்சும் இதழெடுத்து
கொவ்வை நிறம் கலந்து
அஞ்சுகமெனப் பெயரெடுத்து
அகிலத்தை ஆள்பவளே!

மஞ்ஞை எனும் பெயரெடுத்து
மானிடத்தின் மனங்கவர்ந்து
நெஞ்சத்தில் நிறைபவளே
நிகரில்லா அரும் மகளே!

தூரத்தில் வரும்போதே
துளைக்கும் குரலெடுத்து
ஆரவாரம் செய்பவளே
ஆர்ப்பரிக்கும் குயில் மகளே!

கூரான மூக்கெடுத்து
குனிந்து முகம் புதைத்து
காரிருள் கலையுமுன்னே
கனிரசம் குடிப்பவளே!

கொண்டைத் தலையசைத்து
கோதி நல்ல வீடமைத்து
அண்டி வந்தோர்க் குதவிடும்
அரும் நிறத்துக் கலைமகளே!

முகத்தில் வெள்ளையடித்து
முழு உலகும் வட்டமடித்து
கணத்தில் கொள்ளையடிக்கும்
கருடனே, கவின் மகளே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading