பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 184
09/08/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“தானே வரும் மிடுக்கு”
——————————-
மழையொன்று வந்துபோய்
மறுநாள் சிறு வெயிலில்…
குழைவான காட்சியொன்று
குளிரவித்தது என் கண்ணை!

செயல்வீரர் வரவேற்பில்
செங்கம்பளம் விரித்தது போல்…..
அயல்வீட்டு ரோஜாச் செடி
அருஞ் சிகப்பாய் பூத்ததுபோல்….

செந்தழல் துண்டொன்று
சிதறியே விட்டது போல்……
அந்தரத்தில் உலாவரும்
ஆதவனின் துகள்கள் போல்…..

மண்ணிறத் தட்டொன்றில்
மாணிக்கம் பதித்தது போல்….
செந்நிறக் குருதி யெங்கும்
சிந்திக் கிடந்தது போல்……..

அழகுமிகு அஞ்சுகத்தின்
அலகின் நிறத்தது போல்……..
பழகுதமிழ் புலவனவன்
பாரதியின் திலகம் போல்…….

பரம்பியிருந்த கூட்டத்தில்
இரந்து பெயர் கேட்டேன்.
எம் பெயர் “தம்பளப் பூச்சி”
என்றன அவை மிடுக்குடன்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading