மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு
“அறம் வேர் அறுக்கும்”
சரித்ததாய்ச் சிரித்தாய் சரித்திரம் பேசுதுபார் எம்திறத்தை
விரிந்து சினந்துயர்ந்த உம்மினக் கரங்களே
காட்டுதுபார் நீமறந்த அறத்தை
வாக்குக் கொடுத்த கரங்களே
கொய்திடக் காத்திருக்கு உம்சிரத்தை

எரியும் வயிறுகளே புரியுது அற்புதம்
கரிபடிந்த ஏடுகளில்
காணுவர் உம்முகம்

ஓர்குடைக்குள் குழுமிவிட்டோம் இனச்சட்டை கழற்றி
தடைகளைத் தகர்த்தெறிவோம்
சாட்டை சுழற்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading