மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து நிற்கும்

வழுவிய நெறிகளுள்
உழன்றிடும் மாந்தர்கள்
விழிகளுள் பேசி நின்றார்
சுதந்திரம் எதுவென புரியா மனிதர்கள்
சுந்தரம் இழந்த கதை

ஆம் விட்டுக் கொடுத்தலும்
பொறுப்புடன் தொடர்தலும்
அன்புடன் தோழமையும்
அகன்ற உலகினில்
மறைந்தது கண்டு
மனமது வெதும்புகின்றோம்

எதையோ தேடி உள்ளதைத்தொலைத்து
அழகாம் வாழ்வின் பின்னலைக் கலைத்து
நேசத்தொடரை கானல் நீராய்
கலைத்து எழுதும் மாதரின் பக்கம்
தாயாய் நின்று தவித்துத் தொலைந்தேன்

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading