மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ நிலைமாறும் பசுமை “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.05.2022

பசுமை போர்த்திய பூமி இன்று
பொலிவிழந்து தவிக்குது
இயற்கையின் வனப்பு இன்று
நிலைகுலைந்து நிற்குது
வீடுகளை அமைக்க வீதிகளை விரிவாக்க
காடுகளை அழித்து பசுமையின் வனப்புக்களை
கண்டபடி அழிக்கின்றார் கயவர்கள்
வெறுமை குடிகொள்ள பசுமையிங்கு நிலைமாறுதே !

இளைப்பாற நிழல் தரும் குடைகளாய்
உண்ணக் காயாய் கனியாய்
பலதையும் தரும் பயனுறு தருவாய்
பறவைகளின் வாழ்விடமாய்
பிராணவாயுவின் உற்பத்திச் சுரங்கமாய்
குளிர்ச்சி தரும் நிலவாகி காற்றினைச் சுத்தமாக்கி
எமை வாழவைக்கும் தாவரங்களைப் பேணிடுவோம் என்றும் !

சாமரம் வீசிடும் தாவரங்களை
சுற்றுச் சூழலை அழகாக்கும் தருக்களை
மழையின் விதைகளை மண்ணின் வேர்களை
மூச்சின் ஆதாரத்தை மூலிகைகளின் மூலாதாரத்தை
உணவின் உற்பத்திச் சாலையை – என்றும்
உரிமையோடு பேணி பசுமையைப் பாதுகாப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading