மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ இசையின்பம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A)……30.06.2022

இசைக்கெனத் தனிமொழி இதுவரையில்லை
இசையே எமை அசைய வைக்கும் அற்புத மூலிகை
இசையின்றி நாமில்லை இசையின்றி எதுவுமில்லை
இன்ப உலகிற்கு எமை அழைத்துச் செல்வதும் இசையே
இறைவனை அடையும் எளிய வழியும்
செவிக்கு இனிமையைத் தருவதும்
கவிக்கு ஓசை நயத்தைக் கொடுப்பதும் இசையே !

உலகின் பொதுமொழி இசையே
உலக இசைநாள் ஜூன் இருபத்தியொன்றை
உலகே கொண்டாடி மகிழ
உலக இசைநாளின் தாய்வீடாக
உரிமம் பெற்றதே பிரான்ஸ் நாடும்
உன்னதமாக கொண்டாடியதே இசைத்திருவிழாவையும் !

பண் இசைத்துப் பாடும் தேவாரம்
இசையின் முதல் ஆதாரமே
இன்னிசையாய் ஏழிசையாய்
இறைவனைப் போற்றி மகிழ்தல் தமிழ்மரபு
முத்தமிழுக்கு முதன்மை கொடுத்து
இசைத்தமிழாய் நின்று பெருமை சேர்ப்பது இசையே
பிறப்புத் தொட்டு இறப்பு வரை
இசையோடு பயணிக்கிறதே எம் வாழ்வும்
இசையின்பத்திற்கு ஈடிணை எதுவுமில்லையே !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading