மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பேசாமல் பேசும் உலகமொழி “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 22.09.2022

மனித குலத்தின் ஆதிமொழி
ஆதிமனிதனின் ஆட்சிமொழி
மொழிகளுக்கெல்லாம் வழி சமைத்தமொழி
கண்ணாலே காவியம் சொல்லி
கைவிரல் அபிநயத்தை கலைநயமாக்கி
பேசாமலே பேசும் உலகப் பொதுமொழி
சைகை மொழியெனும் மெளன மொழியே !

செவிப்புலன் அற்றோர்க்கு எல்லாம்
விழிப்புணர்வு கொடுத்த மொழி
இனமதம் கடந்த பொதுமொழியாகி
பல்லுலகும் பேதமின்றியே பேசும்மொழி
தொல்லுலகில் எழுபது மில்லியன் பேருக்கு
கைகொடுத்த நிசப்தமொழி
சைகை மொழியெனும் மெளனமொழியே !

எண்ணக் கருக்களை வெளிப்படுத்த
வண்ணத் தகவல்களைப் பரிமாறிட
அங்கங்களை அசைவாக்கி
அபிநயத்தால் புலப்படுமே சைகைமொழி
சைகை மொழியை நாமும் கற்று
கேட்க பேச முடியாதோர்க்கு வழிகாட்டி
வல்லமையோடு அவர்கள் வாழ
வாழ்வில் ஒளியேற்றுவோம் நாமும் !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading