ரஜனி அன்ரன்

“ பேசாமல் பேசும் உலகமொழி “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 22.09.2022

மனித குலத்தின் ஆதிமொழி
ஆதிமனிதனின் ஆட்சிமொழி
மொழிகளுக்கெல்லாம் வழி சமைத்தமொழி
கண்ணாலே காவியம் சொல்லி
கைவிரல் அபிநயத்தை கலைநயமாக்கி
பேசாமலே பேசும் உலகப் பொதுமொழி
சைகை மொழியெனும் மெளன மொழியே !

செவிப்புலன் அற்றோர்க்கு எல்லாம்
விழிப்புணர்வு கொடுத்த மொழி
இனமதம் கடந்த பொதுமொழியாகி
பல்லுலகும் பேதமின்றியே பேசும்மொழி
தொல்லுலகில் எழுபது மில்லியன் பேருக்கு
கைகொடுத்த நிசப்தமொழி
சைகை மொழியெனும் மெளனமொழியே !

எண்ணக் கருக்களை வெளிப்படுத்த
வண்ணத் தகவல்களைப் பரிமாறிட
அங்கங்களை அசைவாக்கி
அபிநயத்தால் புலப்படுமே சைகைமொழி
சைகை மொழியை நாமும் கற்று
கேட்க பேச முடியாதோர்க்கு வழிகாட்டி
வல்லமையோடு அவர்கள் வாழ
வாழ்வில் ஒளியேற்றுவோம் நாமும் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading