ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.05.22
ஆக்கம்-59
தீயில் எரியும் எம் தீவு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமே
முதுமொழியோ மூட்டி விட்டதே
பதுங்கு குழியில் பாதாளச் சிறையிலே
பிதுங்கிய விழியுடன் ஒதுங்கியே போயினரே

கதறக் கதற குத்தி எடுத்த சிறுநீரகக் குதறலது
போற்றும் பச்சைப் பாலனை பிஸ்கற் புகுத்தி
மூச்சை முடித்த இதயத் துடிப்பது
கொத்துக் குண்டால் பொத்தென விழுந்து
உடல் கிழிந்து உதிரம் சொரிந்து உயிரோடு
புதைந்த கூக்குரலது

மாவீரர் துயிலும் இல்லமதை இடித்தழித்த
மிருகத்தைத் துரத்த ஈன்றவர் மனதில் புகைந்த
தீப்பந்தமே எம் தீவில் பற்றி எரிகின்றது

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading