ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

கண்ணீர்தான் மீதி
ஆக்கம் 227
அவலத்திலும் அவலம் முள்ளிவாய்க்கால் பேரவலம்
கொத்துக் குண்டால் பொத்தெனச் சாய்த்து
சொத்தாய் மிஞ்சின எஞ்சிய சிதைந்த
உடற் கூறுகள் ஊன் இறைச்சியாய்

ஊனமுற்று உதிரம் பாய்ந்து உயிரோடு புதைந்த
கொடுமைகள் நீண்ட நொடியில் எரிந்த பிணங்கள்
மறைந்த உண்மைகள் மெளனமாய் நின்ற
சரித்திர வரலாறு

இன்றும் இதற்கு விடிவேயில்லை
என்றும் நினைக்கையில் அஸ்தி
எம் கண்ணீரில் கரைவதுதான் மீதி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading