மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஒளியிலே தெரிவது....

ஒளியிலே தெரிவது….
அழகியல் அவனி ஒளிர்கிறது
அனுதின வாழ்வாய் மிளிர்கிறது
சடுகுடு ஆட்டம் நிகழ்கிறது
சம்பவத் திரட்டாய் தொடர்கிறது

ஒளியினில் அகமே ஒளிர்வாகும்
ஒங்குபுகழாய் மலர்ச்சி பெறும்
ஒற்றுமை உலகை விரிவாக்கும்
ஒளிக்குள் ஒளியே உலகாளும்

காரிருள் விலகிட கண்துயின்றார்
கடமையின் உயிர்ப்பில் வென்றுயர்ந்தார்
கார்த்திகை மைந்தர்கள் கல்லறைகள்
ஒளியினில் ஒளிரும் திங்களிது
ஓர்முகப் பார்வையின் விடியலிது

அறிவொளி ஒளியாய் பிரகாசம்
அகலொளி ஏற்றிய ஒளித்தீபம்
கல்வியின் விதைப்பே விளக்கமாகும்
கலங்கரை விளக்காய் சுடரேற்றும்

ஒளியற்று உலகே ஒளிராது
ஒளிரும் வாழ்வே உலகமயம்
அணிசேர் ஐக்கிய புவிக்குள்ளே
ஆவதும் அழிவதும் அதன்செயலே
ஆக்குதிறனின் முதற்படியில்
அடித்தளமாவது ஒளிமுதலே
விடியலின் விளக்கொளி கிழக்காகும்
விதைப்படும் விற்பனம் இலக்காகும்.!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading