வசந்தா ஜெகதீசன்

நிலைமாறும் பசுமை…
புரட்சி நிறைந்த புவியின் வாழ்வு
பூக்கும் மரங்கள் செயற்கையின் காவு
இயற்கை குன்றி இயல்பு மாறுதுபச்மை வரண்டிட பாதை செப்புது

பூச்சிக் கொல்லியும் புது வகை உரமும்
நிறைந்த காய்கறி பயன்பெறு யுத்தியும்
விளைந்து பெருகிட விளைச்சல் நிறைந்திட
அழியுது இயற்கை ஆளுது செயற்கை
நானில வளமே நாணிக் குறுகுது
நாம் வாழ் உலகே நச்சாய் மாறுது
நிலத்தின் உயிரினம் நிர்க்கதியாகுது
வளத்தில் பூமி வனப்பில் குன்றுது
மண்ணின் அரிப்பு மரங்களின் தறிப்பு
மாந்தவினத்தின் மதியற்ற செயலில்
பசுமை மாறுது பாரே இருளுது
நிலையது மாறும் நித்திலம் மீட்க
அறிவது கொண்டு எழுதலே வெற்றி
ஆற்றலைக் கொண்டு செயல்படல் யுத்தி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading