மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஏக்கம் விலத்திய ஏறுமுகம்…
எழுத்தின் வனப்பு ஏற்றமிடும்
இனத்தின் தோப்பு வளர்ச்சியுறும்
அடுத்த தலைமுறை எழுச்சி பெறும்
அயராப் பணியே அணி மகுடம்

தொடர்ச்சி காணும் வீரியத்தில்
துலங்கும் புலமை மொழியாற்றல்
விதையாய் ஊன்றிய விருட்சத்தில்
வெள்ளி விழாவின் வரவேற்பு

எழுத்தில் ஊன்றிய விதை நாற்று
எண்திசையெங்கும் ஒளிவீச்சு
பாமுகமாக வளர்ச்சியுற
பட்டிட்ட பாடுகள் பலநூறு
சுட்டிட சுட்டிட ஒளிரும் பொன்போல்
எதற்கும் அஞ்சா மனத்துணிவே
இன்றென ஒளிர்ந்திடும் வரலாறு

உருவாக்கத்தின் உளவியல் போராளி
நான்காம் தலைமுறை பெருவேள்வி
ஆக்கும் திறனுக்கு அட்சயமாய்
அணிசேரும் நேயர்கள் உறுதுணையாய்
காக்கும் கண்ணியம் பெரும்நிதியாய்
நோக்கம் இன்று விழுதாச்சே
ஏக்கம் விலத்திய ஏறுமுகம்
எண்திசை ஒளிரும் பாமுகமே.
நன்றி
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading