விரல் நுணியில் அறிவியல்

கெங்கா ஸ்ரன்லி

ஆன்றோர் அளந்து வைத்த அறிவியல்
இன்று விஞ்ஞான ஆய்வு கண்டுபிடிக்கிறது
அன்று எப்படிக் கண்டுபிடித்தார் இதை
என்றாவது சிந்தித்தோமா முன்பு
உலகின் மையமே நடராஐரின்
பாத நுணிவிரலில் என்றால்
எவ்வளவு நுண்ணறிவு உடையவர்
நம் முன்னோர்கள்
அணுகூட சிறிதென்று
ஓளவை கூறினாரே
இப்பொழுது தானே இவையெல்லாம்
விஞ்ஞான அறிவியலில்
வெளிப்படை யாச்சு
அன்று மெய்ஞானத்துடன் விஞ்ஞானமும்
பின்னிப் பிணைந்திருந்ததால்
அறிவியல் சிறந்து விளங்கியது
இன்றும் இன்னமும் கண்டுபிடிக்கும்
அண்டங்கள் கிரகங்கள்
அன்றே எம்மவர் கூறிய அறிவியலே
ஆக எம் முன்னோரது
அறிவியல் சக்தி அளப்பரியதன்றோ
அதுவே விரல நுணியில் இருந்திருக்கலாமோ!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading