தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

“வேரைத் தாங்கும் விழுதுகள்”

நேவிஸ் பிலிப் கவ இல(554)

விதையில்இருந்து வளரும்
மரத்தின் வேரினைத்தாங்கி
தன் வினைப் பயனை ஆற்றிட
விளைந்து வருவது விழுதகள்

விண் நோக்கிச் செல்லும்
திறமை இருந்தும் தன்னைத்
தாங்கிய மண்ணோக்கிச் செல்லும்
கடமை கொண்ட விழுதுகள்

அகழ்வாரைத் தாங்கும் நிலமாய்
இல்லாது போயினும்
தன்னை உருவாக்கிய
மரத்தைத் தாங்கும் விழுதுகள்

மேலிருந்து கீழ்நோக்கி வரும்
ஆசீர் வாதமென
மரத்திற்கோர் பலமென
விளைந்து வரு்ம் விழுதுகளும்

மரம் சில விழுதுகளை இழந்தாலும்
அப்பணிதனைப் பங்கிட
பலநூறு விழுகள்
பக்க பலமாய்உயிர்த்திடுமே
நன்றி…………

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading