மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஷர்ளா தரன்

வசந்தம் உன் வாசலில்
வாழும் வாழ்க்கை நீ்கொண்டால்
கசந்திடாது உள்ளே கூப்பிடு
வசந்தம் அது வரட்டும்

பழஞ்சோத்து கஞ்சியும்
பச்சை மிழகாயும்
பிசைந்து சாப்பிடும் போது….
கடைக்கண்ணில் வரும் கண்ணீரும்
உடைந்து போன வீட்டு ஓடும்
உருகிப்போன உடம்போடும்
கரைந்து ஓடும் நம் வாழ்க்கை
காணாதோ வசந்தம்

தெரிந்து செய்த பிழைகள்
தெரியாமல் செய்த தவறுகள்
தெரிந்தும் தெரியாமல்
விலகிய உறவுகள்
வருந்தும் வேளையிலும்
வாசல் வராதது…
கரைந்து போன நாட்கள்
கண்ட வலி போகுமோ
உடைந்து போன மனதுக்குள்
ஊற்றாய் திரும்பாதோ
வறண்டு போன நிலத்தில்
மழையாய் வசந்தம் வராதோ

இருட்டும் நேரத்தில் கை விளக்கும்
இறுகப் பிடித்த பிள்ளையும்
கடைத் தெரு போகையில்
காலில் கூசும் பாம்பும்
படை நடுங்க வைக்கும்
பாயும் நாய்களின் ஓசையும்
பயந்து கழியும் இந்த வாழ்க்கை
பகலாய் மாறி
மின் ஒளியில் வசந்தம் வராதோ
இந்த்வாழ்க்கை வசந்தமாகதோ

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading