மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ஷர்ளா தரன்

வசந்தம் உன் வாசலில்
வாழும் வாழ்க்கை நீ்கொண்டால்
கசந்திடாது உள்ளே கூப்பிடு
வசந்தம் அது வரட்டும்

பழஞ்சோத்து கஞ்சியும்
பச்சை மிழகாயும்
பிசைந்து சாப்பிடும் போது….
கடைக்கண்ணில் வரும் கண்ணீரும்
உடைந்து போன வீட்டு ஓடும்
உருகிப்போன உடம்போடும்
கரைந்து ஓடும் நம் வாழ்க்கை
காணாதோ வசந்தம்

தெரிந்து செய்த பிழைகள்
தெரியாமல் செய்த தவறுகள்
தெரிந்தும் தெரியாமல்
விலகிய உறவுகள்
வருந்தும் வேளையிலும்
வாசல் வராதது…
கரைந்து போன நாட்கள்
கண்ட வலி போகுமோ
உடைந்து போன மனதுக்குள்
ஊற்றாய் திரும்பாதோ
வறண்டு போன நிலத்தில்
மழையாய் வசந்தம் வராதோ

இருட்டும் நேரத்தில் கை விளக்கும்
இறுகப் பிடித்த பிள்ளையும்
கடைத் தெரு போகையில்
காலில் கூசும் பாம்பும்
படை நடுங்க வைக்கும்
பாயும் நாய்களின் ஓசையும்
பயந்து கழியும் இந்த வாழ்க்கை
பகலாய் மாறி
மின் ஒளியில் வசந்தம் வராதோ
இந்த்வாழ்க்கை வசந்தமாகதோ

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading