மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 646

மாசில்லா உலகம் படைப்போம்

பாதியில் வந்த வேதியலால்
ஆதியின் தன்மையில் மாற்றம்
இயற்கையை விட்டு விலகி
செயற்கைக்கு உட்பட்ட வாழ்வு
தொழிற்திறன் கூடிய தொழிற்சாலைகள்
கழிவுகள் வாய்க்காலை நிரப்பின
பாவம் செய்ததோ ஏரிகள்
சாபமிது களங்கப்பட்டன நீர்நிலைகள்

தூசுகள் காவிய வளி
மாசுபட்டுக்கொண்டது பூமி
தாய்மையை கொண்டாடும் எவரும்
தூய்மையை பின்பற்ற வேண்டும்
குப்பைகளால் நிறைகின்றது அவனி
உப்பிட்டதிற்கு செய்யும் துரோகம்
கணக்கில்லா உயிர்களின் சொத்து
உனக்கென்றும் எனக்கென்றும் இல்லை

பயிர்களைப் பற்றி சிந்திக்கவில்லை
உயிர்களின் பக்கமும் அக்கறையில்லை
பெருகிவிடும் ஆபத்தை அறியவில்லை
அருகிவரும் வளங்களையும் உணரவில்லை
உற்பத்தி நிலையங்களின் அதிகரிப்பு
சுற்றுச்சூழலில் ஏனோ ஆர்வமில்லை
காற்றில் கரியமலவாயுவின் ஆக்கிரமிப்பு
ஆற்றில் திரவக்கழிவுகளின் ஆதிக்கம்

சுற்றம் கழிவால் திணிப்பு
தொற்றுநோயின் உற்பத்திசாலையாய் காசினி
குடிக்கும் நீரும் குறைகின்றது
பிடிப்பு இல்லை அதைப்பற்றி
சிந்திக்கா விட்டால் இப்போதே
சந்ததியும் பின்னர் கலங்குமன்றோ
புனிதமான பூலோகம் அமைப்போம்
மனிதத்தோடு வலம் வருவோம்

ஜெயம்
29-03-2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading