நகுலா சிவநாதன்

எல்லாம் சிலகாலம்

காலங்கள் எல்லாம் சிலநாட்கள்
கனிந்திடும் திருநாளும் சிலநாட்கள்
பாலங்கள் அமைத்து வாழ்ந்தாலும்
பண்போடு வாழ்தலே பேறாகும் பெருமை

எல்லாம் சிலகாலம் நடக்கும்
ஏற்றம் ஒருநாள் வந்தேயாகும்
பல்லோர்கள் போற்ற வாழ்வதுண்டு
நல்லோராய் வாழ்வதும் சிலநாட்கள்தான்

பெருக்கும் செல்வமும் பெருமையுடன் உழைப்பும்
வருத்தி உடலை வாழ்ந்தாலும்
எல்லாம் சிலகாலம் தான்
உணர்வான வாழ்வினில் உழைப்பே மூலதனம்
உழைப்பும் சிலகாலம்தான்

எண்ணிடும் நாட்கள் எழுத்தோடு உயர்ந்தாலும்
மண்ணின் உயிர்களை நினைப்பதும் சிலகாலம்
பண்ணிய பாவங்கள் படிப்பினை தந்தாலும்
நுண்ணிய அறிவோடு வாழ்தலே சிறப்பு
எல்லாம் சிலகாலம்தான்

நகுலா சிவநாதன்1726

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading