” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி

மாற்றத்தின் ஒளியாய்
மனங்களுள் தெளிவாய்
ஏற்றத்தின் படியாய்
துலங்கிடும் எழிலே

காலத்தின் மாற்றம்
கனிந்திடும் பொழுதில்
தொடுத்திடும் செயலை
மாற்றிடும் துணிவே

ஞாலத்தின் கடவுள்
ஞாயிறு மகனார் அவர்
தாழ்களில் பணிந்தே
காலத்தை வெல்வோம்

நித்தமும் உழைக்கும்
தோள்களைத்தழுவி
உழைப்பினை ஏற்றே
உயர்வினை வெல்வோம்

எழிலொடு மாற்றம்
ஏந்திடும் கரங்கள்
அகிலத்தின் ஒளியை
வணங்கியே எழுவோம்

Author: