மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

Vajeetha Mohamed

எப்ப வ௫வீங்க மச்சான்
எரிபொ௫ள் வாங்கிக்கிட்டு

டீசல் வாங்க போன மச்சான்
டிமான்டா இ௫க்கும் மச்சான்
எப்பதான் வ௫வீங்களோ
சோறு கறி ஆக்காம எதிர்பார்கின்றேன்

நான் படலைவரை வந்து எட்டி
எட்டிப் பார்க்கிறேன்

வீட்டுக்குள்ள இ௫ந்தவளே
வெளியே போக மறுப்பவளே
கொஞ்சம் பொறு எரிபொ௫ள்
வண்டி வரல்ல இன்ஷா அல்லாஹ்
விடியும் முன்னே வந்திடுவேன்

வ௫ம் வரை பிள்ளைகளை
படுக்கப்போடு பத்திரமா

நாட்டுமக்கள்பணம் எல்லாம்
ஆபிரிக்காவில் பதுக்கிட்டாங்க
அச்சடிச்சு அச்சடிச்சு பணத்தின்
பெறுமதிய விழுங்கிட்டாங்க

அழகான தீவு இப்போ
பஞ்சத்தில வாடுதடி
பாய்கின்ற நீராக வரிசையில்
நாட்டுமக்கள் வேர்வையடி

ஆத்திரம் பலவழியில்
எல்லை தான் மீறுதடி
குடும்ப ஆட்சிமேல்
கொலைவெறி ஆகுதடி

தினக்கூலி மக்களை நினைக்கையிலே
௨ள்மனசு வாடுதடி
௨ள்ளபடி சொன்னாக்கா
௨யிர் இங்கு வாடுதடி

ஆர்பாட்டம் தொடங்கி
ஆறு வாரம் முடிந்தாச்சி
நாசமாப் போன கோட்டா
விலகமாட்டான் என்றாச்சி

இன்னும் இரண்டு வ௫டம்
இந்தப் பண்டி இ௫க்கனுமாம்
இதற்குப் பின்தானும் நாட்டு
நிலமை எப்படியே

பசியோடு வயிறு குடலைத்தின்னுதடி
ஆசியா முத்துக்குள்ளே
ஆட்சியால் தொல்லையடி

Nada Mohan
Author: Nada Mohan