மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பனிப்பூ!
வண்ணச் சோபை இழந்து
வாடிக் கிடக்கும் தருவில்
கண்ணை மயக்கி இழுத்துக்
காட்சி யாக்கும் இன்பம்!
விண்ணும் சொரிந்த கொடையாய்
விரிந்து மலரும் பனிப்பூ!
தண்மை கொண்டே அழைத்துத்
தடக்கி வீழ்த்தி இரசிக்கும்!

தூய வெண்மைப் பூக்கள்
தேசமெங்கும் நிறைக்க
மழலை ஆகி உள்ளம்
மகிழ்ந்து சிரித்துத் துள்ளும்!
ஆசை கொண்டு அணைத்தால்
அனைத்தும் ஓடி மறையும்!
ஓசை இன்றே முடக்கும்
ஊதற் காற்றை நிறைக்கும்!

மாசே காணா மலராய்
மலர்வு கொண்ட பனிப்பு!
மண்ணைத் தொட்ட பின்னே
மனிதர் மனத்தை போலே
வெள்ளைக் குணத்தை மாற்றி
வேண்டி நிற்கும் அழுக்கை!
கதிரின் ஓளியைக் கண்டால்
கலைந்தே ஓடும் பனிப்பூ!

கீத்தா பரமானந்தன்
02-12-24

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading