சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பனிப்பூ!
வண்ணச் சோபை இழந்து
வாடிக் கிடக்கும் தருவில்
கண்ணை மயக்கி இழுத்துக்
காட்சி யாக்கும் இன்பம்!
விண்ணும் சொரிந்த கொடையாய்
விரிந்து மலரும் பனிப்பூ!
தண்மை கொண்டே அழைத்துத்
தடக்கி வீழ்த்தி இரசிக்கும்!

தூய வெண்மைப் பூக்கள்
தேசமெங்கும் நிறைக்க
மழலை ஆகி உள்ளம்
மகிழ்ந்து சிரித்துத் துள்ளும்!
ஆசை கொண்டு அணைத்தால்
அனைத்தும் ஓடி மறையும்!
ஓசை இன்றே முடக்கும்
ஊதற் காற்றை நிறைக்கும்!

மாசே காணா மலராய்
மலர்வு கொண்ட பனிப்பு!
மண்ணைத் தொட்ட பின்னே
மனிதர் மனத்தை போலே
வெள்ளைக் குணத்தை மாற்றி
வேண்டி நிற்கும் அழுக்கை!
கதிரின் ஓளியைக் கண்டால்
கலைந்தே ஓடும் பனிப்பூ!

கீத்தா பரமானந்தன்
02-12-24

Nada Mohan
Author: Nada Mohan