பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சக்தி சிறீனி சங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
வலைப்பூ
***********
உலகம் சுருங்கி
உள்ளங்கைப் பிடியில்
விஞ்ஞான எழுச்சியால்
வியப்புறச் செய்யவே
இன்டர்நெட் என்னும் இணையம்
தெரிந்தோர் தெரியாதோர்
பழகியோர் பழக்கமில்லாதோர்
அண்டை அயலவர்
அனைவரையும் இணைத்த உறவுப்பாலம்
ஒலி ஒளி வடிவக் கோப்புகள்
ஓவியம் படங்கள் மூலம்
உலகம் பயன்பெற உதித்தது வலைப்பூ
வரமாய் வந்தது வலைப்பூ
சரமாய்த் தொடுப்பர்
கவிதை கட்டுரை!
தமிழ் இலக்கிய வளர்ச்சியில்
தரணி உயர்ந்திருக்க
தரமான வலைப்பூக்கள்
தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி
வலைப்பூவின் வலுவில்
வளமான சமுதாயம்
உருவாகட்டும்!

ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள்
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி!
தொழில்நுட்பத்தைக்கையாளும் வாணி மோகனின் பணி போற்றுதற்குரியது.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading