” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்தி சிறீனி சங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
வலைப்பூ
***********
உலகம் சுருங்கி
உள்ளங்கைப் பிடியில்
விஞ்ஞான எழுச்சியால்
வியப்புறச் செய்யவே
இன்டர்நெட் என்னும் இணையம்
தெரிந்தோர் தெரியாதோர்
பழகியோர் பழக்கமில்லாதோர்
அண்டை அயலவர்
அனைவரையும் இணைத்த உறவுப்பாலம்
ஒலி ஒளி வடிவக் கோப்புகள்
ஓவியம் படங்கள் மூலம்
உலகம் பயன்பெற உதித்தது வலைப்பூ
வரமாய் வந்தது வலைப்பூ
சரமாய்த் தொடுப்பர்
கவிதை கட்டுரை!
தமிழ் இலக்கிய வளர்ச்சியில்
தரணி உயர்ந்திருக்க
தரமான வலைப்பூக்கள்
தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி
வலைப்பூவின் வலுவில்
வளமான சமுதாயம்
உருவாகட்டும்!

ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள்
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி!
தொழில்நுட்பத்தைக்கையாளும் வாணி மோகனின் பணி போற்றுதற்குரியது.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan