நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கோடை

சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238

“கோடை”
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!

பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!

ரோஜாவை ராஜாவாக
வாத்து வடித்த
சிறிபவனம் சிரித்தபடி!

தாழ்வாரத்தில் அமர்ந்து
பூக்களின் அழகை பாக்கையில்
மனநிறைவு
மகிழ்வு!

எதிர் வீட்டு
நீச்சல் தடாகத்தில்
வாழும் தவளை!

விடிய விடிய விண்ணதிர
கோணனை பிடி குடிலை பிடுங்கென
கத்திடும் சத்தம்!

காதை பிளக்குது
கார் இருளை அகற்றுது
நித்திரையை குலைக்கிது!

உறவுகளின்
வருகை
உரிமை கொள்ளும் தருணம்
ஊர் கூடும் வேளை!

நன்றி
வணக்கம்