நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

உலகக் கோப்பைத் திருவிழா

கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை துரத்தியே மின்னலாய் ஓட்டம்
உலகக் கோப்பையை வென்றிட ஆட்டம்

எல்லைகள் இல்லாத உலகமாய் இங்கு
இதயங்கள் ஒன்றாய் இணைந்தது அங்கு
இடியென ஆடிடும் வீரரை பாரீர்
விண்ணையும் தொட்டிடும் வேகத்தை பாரீர்

நிறமெது ஜாதியெது மொழியெது நாடெது
உலகத்தை ஒண்றென இணைதிடும் திருவிழா
அகிலம் முழுவதும் நேசிக்கும் உதைபந்து
கோடி மாந்தர் விழிகளால் சுவைப்பதிது

வியர்வை துளிகளால் நனைகின்ற களம்
புதிய வரலாற்றை படைக்கப்போகும் நிலம்

ஜெயம்
09-07-2026

Nada Mohan
Author: Nada Mohan