நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நடிப்பு

சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம் அகத்திலே இருள்
பகர்ந்திடும் பாசம்கலைந்திடும் வேசம்
உடையிலே உத்தமர் நடையிலே துரோகிகள்
கபடம் இல்லையென்பர் கசடை நெஞ்சினில் புதைப்பர்
பேசுவது உண்மையென்பர்
பூசுவது பொய்மை முலாம்
பழிபாவம் சுமக்கிறோமென்பர்
குழியினுள் தள்ளவும் தேங்காய்
காதலைக் கண்ணில் வைப்பர்
கல்யாணம் என்றால் மண் அள்ளிப் போடுவர்
பார்த்தால் பசு போன்றிருப்பர் வார்த்தையில் வாலை ஆட்டுவர்
வாஞ்சை காட்டி நிற்பார்
வஞ்சம் கொண்ட வக்கிரப் போக்கர்
உலகமோ இருட்டு வலம் வரும் திருட்டு முகங்களோ அதிகம்
நகர்ந்திட நாமும் நடிக்கவே வேண்டும்!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan