நடிப்பு

சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம் அகத்திலே இருள்
பகர்ந்திடும் பாசம்கலைந்திடும் வேசம்
உடையிலே உத்தமர் நடையிலே துரோகிகள்
கபடம் இல்லையென்பர் கசடை நெஞ்சினில் புதைப்பர்
பேசுவது உண்மையென்பர்
பூசுவது பொய்மை முலாம்
பழிபாவம் சுமக்கிறோமென்பர்
குழியினுள் தள்ளவும் தேங்காய்
காதலைக் கண்ணில் வைப்பர்
கல்யாணம் என்றால் மண் அள்ளிப் போடுவர்
பார்த்தால் பசு போன்றிருப்பர் வார்த்தையில் வாலை ஆட்டுவர்
வாஞ்சை காட்டி நிற்பார்
வஞ்சம் கொண்ட வக்கிரப் போக்கர்
உலகமோ இருட்டு வலம் வரும் திருட்டு முகங்களோ அதிகம்
நகர்ந்திட நாமும் நடிக்கவே வேண்டும்!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading