நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நடிப்பு

சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம் அகத்திலே இருள்
பகர்ந்திடும் பாசம்கலைந்திடும் வேசம்
உடையிலே உத்தமர் நடையிலே துரோகிகள்
கபடம் இல்லையென்பர் கசடை நெஞ்சினில் புதைப்பர்
பேசுவது உண்மையென்பர்
பூசுவது பொய்மை முலாம்
பழிபாவம் சுமக்கிறோமென்பர்
குழியினுள் தள்ளவும் தேங்காய்
காதலைக் கண்ணில் வைப்பர்
கல்யாணம் என்றால் மண் அள்ளிப் போடுவர்
பார்த்தால் பசு போன்றிருப்பர் வார்த்தையில் வாலை ஆட்டுவர்
வாஞ்சை காட்டி நிற்பார்
வஞ்சம் கொண்ட வக்கிரப் போக்கர்
உலகமோ இருட்டு வலம் வரும் திருட்டு முகங்களோ அதிகம்
நகர்ந்திட நாமும் நடிக்கவே வேண்டும்!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan