மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 601

நாட்டுவாழ்க்கையா காட்டுவாழ்க்கையா

பித்துப் பிடித்தே ஆடுதே மானுடக் கூட்டம்
சித்தம் கலங்கி ஆடுதே ஆடாத ஆட்டம்
யுத்தமொன்று தீர்வாகாது அழிவையே கூட்டும்
கத்தியெடுத்து குத்தினாலது பகையினை ஊட்டும்

இறைவன் படைத்தவுலகத்திலேனோ ஆயுத விளையாட்டு
சிறைப்படுத்தலாமோ ஜனநாயகத்தை பூட்டினைப் போட்டு
மறைசொன்ன வார்த்தைகளை வளர்ந்தவரும் கேட்டு
கறைபட்டுக் கொண்டாரே பாடிச் சுயநலப்பாட்டு

காட்டுமிராண்டியாய் அறியாத வாழ்க்கை அந்தக்காலம்
நாட்டுக்குள் புகுந்த பகுத்தறிந்தவாழ்க்கை இந்தக்காலம்
போட்டுடைத்தே வாழ்க்கையை ஏனிந்த அலங்கோலம்
காட்டிவிட அதிகாரத்தை போட்டிபோட்டழியவாவிந்த ஞாலம்

கூடாது உயிரழிவுகள் பூலோகத்தில் கூடாது
வாடாது நேசமலர்கள் ஒருபோதும் வாடாது
தேடாது உலகமகா அன்பைத் தேடாது
மூடாது சமாதான மேகம் மூடாது.

ஜெயம்
02-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading