” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 601

நாட்டுவாழ்க்கையா காட்டுவாழ்க்கையா

பித்துப் பிடித்தே ஆடுதே மானுடக் கூட்டம்
சித்தம் கலங்கி ஆடுதே ஆடாத ஆட்டம்
யுத்தமொன்று தீர்வாகாது அழிவையே கூட்டும்
கத்தியெடுத்து குத்தினாலது பகையினை ஊட்டும்

இறைவன் படைத்தவுலகத்திலேனோ ஆயுத விளையாட்டு
சிறைப்படுத்தலாமோ ஜனநாயகத்தை பூட்டினைப் போட்டு
மறைசொன்ன வார்த்தைகளை வளர்ந்தவரும் கேட்டு
கறைபட்டுக் கொண்டாரே பாடிச் சுயநலப்பாட்டு

காட்டுமிராண்டியாய் அறியாத வாழ்க்கை அந்தக்காலம்
நாட்டுக்குள் புகுந்த பகுத்தறிந்தவாழ்க்கை இந்தக்காலம்
போட்டுடைத்தே வாழ்க்கையை ஏனிந்த அலங்கோலம்
காட்டிவிட அதிகாரத்தை போட்டிபோட்டழியவாவிந்த ஞாலம்

கூடாது உயிரழிவுகள் பூலோகத்தில் கூடாது
வாடாது நேசமலர்கள் ஒருபோதும் வாடாது
தேடாது உலகமகா அன்பைத் தேடாது
மூடாது சமாதான மேகம் மூடாது.

ஜெயம்
02-04-2022

Nada Mohan
Author: Nada Mohan