மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

மாறியதே வாழ்க்கை……

ரஜனி அன்ரன்( B.A) ….மாறியதே வாழ்க்கை… 16.07.2026

வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின் மாறாவிதியே மாற்றம்
மாறியதே வாழ்வு இதுபுதுவிதி
மாற்றியதே நவீனயுகத்தின் தொழில்நுட்பம் !

நேற்று இருந்தநிலை இன்றில்லை
இன்று இருக்கும்நிலை நாளையில்லை
இயற்கையின் மடியினில் அன்றையவாழ்வு
இயந்திரப் பொறிக்குள் இன்றையவாழ்வு
அதிகாலைப் பொழுதினில் சேவலும்கூவ
அரக்கப்பரக்க எழுந்து அன்புறவுகளுடன் கூடிக்குலாவி
கலப்படமில்லா தானிய உணவுகளைஉண்டு
ஆனந்தமாய் இருந்தது அன்றையவாழ்வு !

அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறைக்குள்வாழ்வு இன்று
அலாரச் சத்தத்தில் விழிக்குது காலை
அவசர ஓட்டத்தில் கழியுதுவேலை
நெகிழிப்பைகளில் அடைத்தஉணவும்
தொடுதிரைபேசியில் மூழ்கியவிழியும்
தொலைத்தே விட்டது இயற்கைவாழ்வை
மாறியதேவாழ்வு மாற்றியதே தொழில்நுட்பம் !

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading