” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

திருமதி திரேஸ் மரியதாஸ்

கௌசல்யா நினைவு
🌺பிரிவென்பது உறவின் துண்டிப்பு🌺😢
உடலோடு உயிரோடு
உலகத்தில் உலாவரும்போது
உள்ளங்களில் விரிசல்களை
உருவெடுக்கவைத்து
விரசல்களாக்காது
உயிரையெடுத்து
உணர்வையுடைப்பதாகும்

இருக்கும்போது
வார்த்தைக்குவார்த்தை இறக்கவைத்து
இறந்தபின்பு மறக்கவில்லை
வெறுக்கவில்லை
நித்தமும் நினைக்கிறோமென
நீண்டகல்வெட்டை வைத்து
பூபாள இராகமிசைப்பது
பூவுலகின்
அத்தியாயங்களாய்ப்
போச்சுதே

வாழும்போது வாள்கொண்டு வெட்டி
வாட்டிவதைக்காது உணர்வுகளை
உறையவைத்து உவகையடையாது
குறுநகையையாவது கொடுப்போம்
மறுபடி பிரசவமில்லையென்று
மனதால் உணர்ந்து

மரணத்தையே ஒழுங்காக
ஒழுங்குசெய்து திறப்பையும்
துறப்புக்குமுன் கொடுத்துக்
கொள்ளிவைக்கவும்
ஆளைத்தெரிந்து
வாழ்ந்த நீ வள்ளல்
கௌசல்யா நீ நெஞ்சுரமுள்ள
வீரப்பெண்தான்
வீழவில்லையம்மா வாழ்கிறாய்
மனங்களில் வாழ்க

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading